TamilsGuide

நெல்லியடியில் மாவீரர்களுக்கு அஞ்சலி

வடமராட்சி – நெல்லியடி மாலிசந்தி பகுதியில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் மண்டபம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

குறித்த மண்டபத்தில் மாவீரர்களின் பெயர் பட்டியல் பொறிக்கப்பட்ட பட்டியல் காட்சிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அங்கு வருகைதரும் மக்கள் மாவீரர்களுக்கு மலர்தூபி அஞ்சலி செலுத்தி வருகின்றமையும் காணக்கூடியதாக உள்ளது.

குறித்த மண்டபத்தில் மாவீரர் வார இறுதி நாளான நவம்பர் 27 வரை அஞ்சலி நிகழ்வுகள் இடம் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment