TamilsGuide

அதிவேக நெடுஞ்சாலையில் ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கை நிறைவு

அதிவேக நெடுஞ்சாலைகளில் ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கை சுமார் 12 மணித்தியாலங்களின் பின்னர் நிறைவுக்கு வந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது

குறித்த 12 மணி நேரத்தில், அதிவேக நெடுஞ்சாலையின் நுழைவு மற்றும் வெளியேறும் வாயில்களில் இராணுவ வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து இரவு 7.00 மணிக்கு நெடுஞ்சாலை பணியாளர்கள் பணிக்கு திரும்பி இருந்தனர்

குறித்த போராட்டமானது நெடுஞ்சாலை வலையமைப்பை தனியார் மயமாக்குவதற்கான திட்டங்களை தயாரித்தல் உள்ளிட்ட பல விடயங்களை அடிப்படையாகக் கொண்டே ஆரம்பிக்கப்பட்டிருந்தது
 

Leave a comment

Comment