TamilsGuide

இலங்கை கிரிக்கட் இடைக்கால குழு விவகாரம் - நாளை மறுதினம் விசாரணை

இலங்கை கிரிக்கட் இடைக்கால குழு விவகாரம் தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றம் நாளை மறுதினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவுள்ளது.

நீதிபதி நீல் இத்தவெல வழக்கிலிருந்து விலகியதையடுத்து, புதிய நீதிபதிகள் குழுவின் முன் தொடர்புடைய வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

அதனைத் தொடர்ந்து புதிய நீதியரசர் குழுவொன்றை பெயரிடுவதற்காக இந்த வழக்கு மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதிபதி நிஸ்ஸங்க பந்துல கருணாரத்னவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அதன் பிரகாரம், இந்த வழக்கு நீதிபதிகள் சோபித ராஜகருணா மற்றும் டி.என்.சமர்கோன் ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு முன்பாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி நீல் இத்தவெல உள்ளிட்ட மூன்று நீதிபதிகள், இது தொடர்பான வழக்கு விசாரணையில் இருந்து விலகியுள்ளனர்.
 

Leave a comment

Comment