TamilsGuide

மக்களின் பிரதிநிதி என்று தொடர்ந்தும் கூறாமல் இராஜினாமா செய்யுங்கள் – ராஜபக்ஷர்களுக்கு சுமந்திரன் வலியுறுத்து

தவறை ஏற்றுக்கொண்டு மஹிந்த ராஜ்பக்ஷ உள்ளிட்டவர்களை இராஜினாமா செய்ய வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

பொதுமக்களின் நம்பிக்கையை இழந்த அவர்கள் தொடந்தும் மக்களின் சார்பாக நாடாளுமன்றில் இருப்பது தவறு என்றும் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு பேசிய அவர், சட்டத்தையும் ஜனநாயகத்தையும் மதிப்பவர்களாக இருந்தால் இராஜினாமா செய்வதே உகந்தது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 

Leave a comment

Comment