TamilsGuide

சீனா-இலங்கை ஒப்பந்தம் குறித்து IMF மகிழ்ச்சி

இலங்கைக்கும் சீன எக்சிம் வங்கிக்கும் இடையில் ஏற்பட்டுள்ள உடன்படிக்கை இலங்கையின் வெளிநாட்டுக் கடனை மறுசீரமைப்பதில் நல்லதொரு படியென சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

அனைத்து உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்களிடமிருந்தும் நிதி உத்தரவாதங்களைப் பெற்றவுடன், ஐ.எம்.எப். இன் மீளாய்வு இடம்பெறும் என சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக்குழு பிரதானி பீட்டர் ப்ரூவர் கூறியுள்ளார்.
 

Leave a comment

Comment