TamilsGuide

உத்தேச மின்சாரத்துறை மறுசீரமைப்பிற்கு அமைச்சரவை அனுமதி - அமைச்சர் கஞ்சன விஜேசேகர

உத்தேச மின்சாரத்துறை மறுசீரமைப்பு சட்டமூலத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

தனது உத்தியோபூர்வ X – தளத்தில் பதிவிட்டு அமைச்சர் இதனைக் கூறியுள்ளார்.

குறித்த சட்டமூலம் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டதன் பின்னர், நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சட்டமூலம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்படுமாயின், இலங்கை மின்சாரசபை மறுசீரமைப்பு, செயல்திறன், வெளிப்படைத்தன்மை, தனியார் துறை பங்களிப்பு, மின் விநியோகம் மற்றும் பரிமாற்றம் ஆகியனவற்றில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படும் என மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர மேலும் தெரிவித்துள்ளார்.
 

Leave a comment

Comment