TamilsGuide

மாவீரர்களின் பெற்றோருக்கு கௌரவம்

மாவீரர்களின் பெற்றோரைக் கௌரவிக்கும் நிகழ்வானது இன்று(21) கிளிநொச்சி மாவட்டத்தின் கிளிநொச்சி கிருஸ்ணபுரம், விநாயகபுரம், அம்பாள்குளம் ஆகிய பகுதிகளில் நடைபெற்றது.

தமிழரசுக்கட்சியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது மாவீரர்களின் நினைவு படத்திற்கு விளக்கேற்றி, மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. அத்துடன் நிகழ்வில் பங்கேற்றவர்களுக்கு மரக்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டன.
 

Leave a comment

Comment