TamilsGuide

சமாதான நீதவானாக பதவியேற்பு.

மண்டைதீவு 6ம் வட்டாரத்தைச் சேர்ந்த திருமதி. சற்குணராணி யாதவகுலசிங்கம் அவர்கள் அகில இலங்கை சமாதான நீதவானாக நீதிச்சேவைகள் அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் கொழும்பு ஆட்பதிவுத் திணைக்களம், சங்கானை பிரதேச செயலகம், யாழ்மாவட்ட காணிப்பதிவகம் மற்றும் பத்திரமுல்ல பதிவாளர் நாயகம் திணைக்களம் ஆகியவற்றில் பொது முகாமைத்துவ உதவியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அகில இலங்கை சமாதான நீதவானாக பதவியேற்கும் திருமதி. சற்குணராணி யாதவகுலசிங்கம் அவர்களைப் பாராட்டி வாழ்த்துகின்றோம்.
 

Leave a comment

Comment