TamilsGuide

மற்றுமொரு சீன ஆய்வுக் கப்பலுக்கு அனுமதி

அடுத்த வருடத்தின் ஆரம்பத்தில் இலங்கைக் கடற்பரப்பிற்குள் பிரவேசிப்பதற்கு சீனாவின் மற்றுமொரு ஆய்வுக் கப்பலுக்கு அனுமதி கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனத் தூதரகத்தினால் வெளிவிவகார அமைச்சிடம் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடல்சார் ஆய்வுகளில் ஈடுபடும் ஸியாங் யாங் ஹொங் 3 என்ற கப்பலுக்கு இந்த அனுமதி கோரப்பட்டுள்ளதாக குறித்த தகவல்கள் குறிப்பிடுகின்றன.

எனினும், இந்த கோரிக்கை இன்னும் பரிசீலிக்கப்படவில்லை என வெளிவிவகார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

Leave a comment

Comment