TamilsGuide

கைது செய்யப்பட்ட 22 இந்திய மீனவர்களும் விடுதலை

எல்லை தாண்டிய குற்றச்சாட்டில் நேற்று இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் பாம்பன் பகுதி மீனவர் 22 பேர் இரண்டு நாட்டுப்படகுகளுடன் பாம்பன் துறைமுகம் சென்றடைந்தனர்.

மற்றும் பாம்பன் பகுதிகளைச் சேர்ந்த 22 பேர் நேற்று பகல் 2 மணியளவில் பருத்தித்துறை கடல் பகுதியில் வைத்து எல்லை தாண்டி சட்டவிரோதமாக மீன் பிடித்த குற்றச்சாட்டில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

இந்திய அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்க சிறைபிடிக்கப்பட்ட 22 மீனவர்களும் விடுவிக்கப்பட்டனர்.
 

Leave a comment

Comment