TamilsGuide

நாட்டு மக்களை இனிவரும் காலங்களில் ஏமாற்ற முடியாது

நாட்டு மக்களை இனிவரும் காலங்களில் ஏமாற்ற முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாகிர் மார்கார் தெரிவித்துள்ளார்.

வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான ஐந்தாம் நாள் விவாதம் நாடாளுமன்றத்தில் தற்போது இன்று இடம்பெற்று வருகின்றது.

இதில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் அரசாங்கத்தின் பொய்களை நம்புவதற்கு மக்கள் தயார் இல்லை என்றும் புதிய மாற்றத்தையே எதிர்பார்ப்பதாகவும் அவர் குறுpப்பிட்டுள்ளார்.
 

Leave a comment

Comment