TamilsGuide

யாழில் பிக் மீ சாரதி மீது தாக்குதல்

யாழ், திருநெல்வேலி பகுதியில் பிக்மீ சாரதி ஒருவர் மீது தரிப்பிட முச்சக்கரவண்டி சாரதிகள் ஒன்றுகூடி தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து  யாழ் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யச் சென்றபோது பொலிஸாரும் தனக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் நடந்து கொண்டதாக பாதிக்கப்பட்ட பிக்மீ சாரதி கவலை தெரிவித்துள்ளார்.

அண்மைக்காலமாக யாழில் பிக்மீ மற்றும் ஊபர் சேவையைப் பயன்படுத்திவரும் முச்சக்கரவண்டி சாரதிகள் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு வரும் சந்தர்ப்பங்கள் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment