TamilsGuide

யாழில் கையடக்கத் தொலைபேசித் திருட்டில் ஈடுபட்டுவந்த மூவர் கைது

யாழில், பேருந்துகளில் பயணம் செய்வர்களை இலக்கு வைத்து கையடக்க தொலைபேசி திருட்டில் ஈடுபட்டு வந்த மூவரைப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

யாழ் நகரை அண்டிய வண்ணார் பண்ணை, பிரப்பங்குளம் சிவலிங்கபுளியடியை சேர்ந்த 24,31,33 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது  குறித்த நபர்களிடமிருந்து நான்கு இலட்சம் ரூபாய் பெறுமதியான 8 கையடக்க தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Leave a comment

Comment