TamilsGuide

மனைப் பொருளியல் டிப்ளமோ சான்றிதழ் வழங்கி வைப்பு

வட மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் கீழ் இயங்கும் மகளிர் அபிவிருத்தி நிலையங்களில் மனைப் பொருளியலில் டிப்ளமோ கற்கைநெறி பூர்த்தி செய்தவர்களுக்கு  சான்றிதழ் வழங்கும்  நிகழ்வு இன்று சாவகச்சேரி நகராட்சி மன்றத்தின் பொன் விழா மண்டபத்தில் நடைபெற்றது.

வட மாகாண கிராம அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளர் த.சசீலன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ், வட மாகாண பிரதம செயலாளர் சமன் பந்துலசேன, வடமாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் இ.வரதீஸ்வரன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

வடக்கு மாகாணத்தில் 302 பேருக்கு இதன்போது சான்றிதழ் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment