TamilsGuide

டயனா கமகே தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சபாநாயகர் விடுத்த செய்தி

நாடாளுமன்ற வளாகத்தில் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தாக்கப்பட்டமை தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை சிறப்புரிமைக் குழுவிற்கு அனுப்பி வைக்கப்படும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான இரண்டாம் நாள் விவாதத்தின் போதே சபாநாயகர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சம்பவம் தொடர்பில் விசாரணைகளை நடத்துவதற்கு நியமிக்கப்பட்ட குழுவின் தலைவரும் பிரதி சபாநாயகருமான அஜித் ராஜபக்ஷ இது தொடர்பான அறிக்கையை சபாநாயகரிடம் நேற்று கையளித்துள்ளார்.

இராஜாங்க அமைச்சர் டயானா கமகே, நாடாளுமன்ற உறுப்பினர்களான ரோஹன பண்டார மற்றும் சுஜித் சஞ்சய் பெரேரா ஆகியோருக்கு இடையில் கடந்த ஒக்டோபர்; 20ஆம் திகதி இடம்பெற்ற சம்பவம் தொடர்பான முறைப்பாடுகளை ஆராய்ந்ததன் பின்னரே குறித்த அறிக்கை கையளிக்கப்பட்டுள்ளது.
 

Leave a comment

Comment