TamilsGuide

நவம்பரில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு

நவம்பர் மாதத்தில் முதல் 12 நாட்களில் மட்டும், 55 ஆயிரத்து 491 சுற்றுலாப் பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

ரஷ்யாவில் இருந்து 10 ஆயிரத்து 64 பேரும், இந்தியாவில் இருந்து 9 ஆயிரத்து 535 பேரும் நவம்பர் மாதத்தில் முதல் 12 நாட்களில் மட்டும் நாட்டுக்கு வருகைத் தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஜேர்மனியில் இருந்து 6 ஆயிரத்து 545 பேரும் மற்றையவர்கள் ஏனைய நாடுகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகளாக நாட்டிற்கு வருகை தந்துள்ளனர் என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இதற்கமைய, இந்த ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் 11 இலட்சத்து 80 ஆயிரத்து 946 சுற்றுலாப் பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளதாக குறித்த அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.
 

Leave a comment

Comment