TamilsGuide

மண்சரிவு எச்சரிக்கை மேலும் நீடிப்பு

ஆறு மாவட்டங்களின் பல பகுதிகளில் விதிக்கப்பட்டிருந்த மண்சரிவு எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன்படி, பதுளை, குருநாகல், மஹானுவர, மாத்தறை, கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.

குறித்த எச்சரிக்கை இன்று (திங்கட்கிழமை) பிற்பகல் 3.00 மணி வரை அமுலில் இருக்கும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
 

Leave a comment

Comment