TamilsGuide

இரண்டாவது நாளில் அதிகரித்து ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் வசூல்.. 

முதல் முறையாக ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ். ஜே. சூர்யா இருவரும் இணைந்து நடித்து வெளிவந்துள்ள திரைப்படம் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்.

இப்படத்தின் முதல் பாகம் எவ்வளவு பெரிய வெற்றி என்பதை நாம் அறிவோம். அதே கதைக்கருவை மட்டும் வைத்து ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்ராஜ் எடுத்துள்ளார்.

அந்த ஃபார்முலா தற்போதும் மக்கள் மத்தியில் நன்றாக ஒர்கவுட் ஆகியுள்ளது. விறுவிறுப்பான திரைக்கதை, கதாபாத்திரங்களின் வடிவமைப்பு என மக்களை கவரும் வகையில் அதிக விஷயங்கள் படத்தில் நிறைந்து இருக்கிறது.

முதல் நாள் உலகளவில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் ரூ. 4 கோடி வரை வசூல் செய்திருந்தது நிலையில், இரண்டாவது நாள் இப்படத்தின் வசூல் நன்றாக அதிகரித்துள்ளது. ஆம், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் இரண்டாவது நாள் வசூல் மட்டுமே 5 கோடி ஆகும்.

இதன்மூலம் இரண்டு நாட்களில் மொத்தமாக ரூ. 9 கோடிக்கும் மேல் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களிலும் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என கூறப்படுகிறது. 
 

Leave a comment

Comment