TamilsGuide

ஒளி நிறைந்த பாதையில் இலங்கை தனது பயணத்தை ஆரம்பித்துள்ளது-ஜானாதிபதி

இந்து மக்களினால் கொண்டாப்படும் தீபாவளி பண்டிகையில்  மனத்துள்ளே இருக்கும் தீய எண்ணணங்களை நீக்கி ஒளியை உதயமாக்கும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று (ஞாயிற்க்கிழமை) வெளியிட்ட தீபாவளி வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை  இரு வருடங்களில் எதிர்கொண்டிருந்த இருளான யுகத்திலிருந்து மீண்டு, ஒளி நிறைந்த பாதையில் இலங்கை தனது பயணத்தை ஆரம்பித்துள்ள இந்தத் தருணத்தில் சுபீட்சமாக நாடு மேம்பட வேண்டும் எனவும் பிரார்த்தனையில் ஈடுபடுங்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் பல்லின மக்களுக்கு மத்தியில் சமாதானம், சகவாழ்வு,  கூடிய ஆன்மீக வளர்ச்சியை ஏற்படுத்தவும் இந்த தீபாவளி பண்டிகை வரப்பிரசாதமாக அமைய வேண்டும் என நான் பிரார்த்திக்கின்றேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 

Leave a comment

Comment