TamilsGuide

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில்

அடுத்துவரும் புத்தாண்டின் முற்பகுதியில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் .விஜயதாஸ ராஜாபக்ஷ தெரிவித்தார்.

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் கருத்துவெளியிடும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் சம்பந்தமாக சிவில் மற்றும் இதர தரப்புக்களுடன் கலந்துரையாடும் செயற்பாடுகளுக்காக அதனை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் செயற்பாடுகள் தாமதப்படுத்தப்பட்டுள்ள என்றும்

தற்போது அந்தச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு, அவர்களின் அபிப்பிராயங்கள் மற்றும் முன்மொழிவுகள் அனைத்தும் உள்ளடக்கப்பட்டே வரைவு இறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a comment

Comment