TamilsGuide

சூர்யாவும் நானும் சேர்ந்து நடிப்போம்- கார்த்தி உறுதி

கடந்த 2007-ஆம் ஆண்டு இயக்குனர் அமீர் இயக்கத்தில் வெளியான 'பருத்தி வீரன்' திரைப்படத்தின் மூலம கதாநாயகனாக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் கார்த்தி. இப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல் கார்த்திக்கு பாராட்டையும் பெற்று தந்தது. இதைத்தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன், பையா, நான் மகான் அல்ல, சிறுத்தை, கைதி என படங்களில் நடித்துள்ளார்.

கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியான 'சர்தார்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று ரூ.100 கோடிக்கு மேல் வசூலை குவித்தது. மேலும், இப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் வெளியாகவுள்ளது. கார்த்தியின் 25-வது படமான 'ஜப்பான்' திரைப்படத்தை இயக்குனர் ராஜு முருகன் இயக்கியுள்ளார். இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது.

இந்நிலையில், கார்த்தியின் 16 வருட சினிமா பயணத்தை விவரிக்கும் விதமாக வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இதில், சூர்யாவுடன் சேர்ந்து நடிக்கக் கூடாது என நினைக்கிறீர்களா? என்று கவுதம் மேனன் கார்த்தியிடம் கேள்வி எழுப்புகிறார். அதற்கு கார்த்தி, "சூர்யாவுடன் நடிக்க எனக்கு பயமாக இருக்கு. ஆனால், சில நேரங்களில் ஏன் ஒன்றாக ஒரு படத்தில் நடிக்கக் கூடாது என யோசிப்போம். சில வருடங்களுக்கு முன்பு ராஜமவுலி இருவரும் சேர்ந்து நடிக்குமாறு கூறினார். நல்ல கதை அமைந்தால் நடிப்போம்" என்று பேசினார்.
 

Leave a comment

Comment