TamilsGuide

இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு இரகசிய வலயம் - உண்மையை போட்டு உடைத்த விமல்

கொழும்பு கெத்தாராம விளையாட்டரங்கில் இந்திய வீரர்களின் பயிற்சி நடவடிக்கைகளுக்கு மாத்திரம் தனியான வலயம் இருப்பதாக விமல் வீரவன்ச எம்.பி நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இலங்கை வீரர் ஒருவர் கூட அந்த பிராந்தியத்திற்குள் நுழைய முடியாது என்று கூறிய வீரவன்ச, இந்த உண்மை பலருக்கும் தெரியாது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தொடர்பான பாராளுமன்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றி அவர் இதனை தெரிவித்தார்.
 

Leave a comment

Comment