TamilsGuide

பேராதனை பல்கலைக்கழக மாணவர் குழுக்களுக்கிடையில் மோதல் - மூவர் படுகாயம்

இரு மாணவர் குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் மூவர் படுகாயமடைந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்

பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் மற்றும் பல் மருத்துவ பீடங்களின் மாணவர்களுக்கு இடையில் நேற்று மாலை கைகலப்பு ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்படி படுகாயமடைந்த பல் பீட மாணவர்கள் மூவர் பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment