TamilsGuide

இலங்கை கிரிக்கெட் சபைக்கு முன்பாக உள்ள வீதி மூடல்

போராட்டத்தை முன்னிட்டு, இலங்கை கிரிக்கெட் சபைக்கு முன்பாக உள்ள வீதியை மூடியுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

இதன் காரணமாக மைட்லேண்ட் வீதி, டொரிங்டன் சந்தியில் போக்குவரத்து ஸ்தம்பிதம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுட்டள்ளது.

இலங்கை கிரிக்கெட் சபையை அண்மித்த பகுதியில் இடம்பெறும் ஆர்ப்பாட்டத்தை தடுக்க பொலிஸ் மற்றும் இராணுவ வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, ஊழல் மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படும் இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் உள்ளிட்டோரை பதவியில் இருந்து நீக்குவது தொடர்பிலான நாடாளுமன்ற விவாதமும்இடம்பெற்று வருகின்றது.
 

Leave a comment

Comment