TamilsGuide

இஸ்ரேலில் உயிரிழந்த மற்றுமொருவரின் சடலம் நாட்டை வந்தடைந்தது

இஸ்ரேல் – ஹமாஸ் மோதலில் உயிரிழந்த இரண்டாவது இலங்கையர் சுஜித் யடவர பண்டாரவின் சடலம் இன்று (09) காலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது.

சடலம் இஸ்ரேலில் இருந்து டுபாய்க்கு கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து இன்று காலை 08.37 மணியளவில் Fly Dubai Airlines விமானம் FZ-579 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது.

சுஜித் யடவர பண்டாரவின் மனைவி ஜயனி மதுவந்தி, 13 வயது மகள், 09 வயது மகன், இலங்கைக்கான இஸ்ரேலிய உயர்ஸ்தானிகர் தினேஷ் பிரியந்த, முன்னாள் அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விமான நிலைய நிர்வாக அதிகாரி அசோக பிரேமசிறி ஆகியோர் உடலை பெற்றுக் கொண்டனர்.

சுஜித் யடவர பண்டாரவின் இறுதிக்கிரியைகள் எதிர்வரும் சனிக்கிழமை வென்னப்புவ, துலாவெல, மடவலப்பிட்டி பொது மயானத்தில் இடம்பெறவுள்ளதாக அவரது மனைவி ஜயனி மதுவந்தி தெரிவித்துள்ளார்.
 

Leave a comment

Comment