TamilsGuide

பாகிஸ்தானில் தங்கி உள்ள ஆப்கானிஸ்தான் அகதிகள் வெளியேற்றம்

பாகிஸ்தானில் சமீப காலமாக பயங்கரவாதிகள் தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். அடுத்தடுத்து 4 தடவை பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலால் பாகிஸ்தான் நிலை குலைந்துள்ளது. பயங்கரவாதிகள் அகதிகள் போர்வையில் பாகிஸ்தானில் தங்கி இருந்து இந்த தாக்குதலில் ஈடுபடலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

பாகிஸ்தான் நாட்டை பொறுத்தவரை அண்டை நாடான ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த ஏராளமான அகதிகள் தங்கி உள்ளனர். இதையடுத்து ஆவணங்கள் எதுவும் இல்லாமல் சட்டவிரோதமாக தங்கி இருக்கும் ஆப்கானிஸ்தான் அகதிகளை வெளியேற்றும் முயற்சியில் பாகிஸ்தான் அரசு தீவிரமாக இறங்கி உள்ளது.
 

Leave a comment

Comment