அது ஒரு தெலுகுபட படப்பிடிப்பு. ரொம்பவும் சங்கோஜமான ஒரு நடனத்தை அந்த நாயகனும் நாயகியும் ஆடவேண்டும். நாயகிக்கோ சங்கடம், என்னடா நம்மை கவர்ச்சி நடிகை மாதிரி பண்றாங்களே என்று, மெதுவாக நாயகனிடம் சொல்கிறார் அசைவுகளை மாற்ற சொல்லுங்கள் ரொம்பவும் கவர்ச்சியாக இருக்கிறது என்று...
அதற்கு அந்த நாயகன் " இப்போ நான் ஆடலைன்னா வேறு ஒரு நாயகன் பண்ணுவான் அவன் சம்பாரிச்சுட்டு போயிடுவான் இதுல என்னயிருக்கு..." என்றாராம்.
விதிர்த்துப் போன நாயகி இனி திரையில் தொடர்வது நல்லதல்ல என்று இரண்டே மாதத்தில் திருமணமாகி சற்று திரையைவிட்டு ஒதுங்கி போனார்.
அந்த நாயகி - வாணிஸ்ரீ
நாயகன் - தெலுகர்களின் கடவுள் N.T.R
தென்னக திரையில் எத்தனையோ நாயகிகள் வந்தாலும், வாணிஸ்ரீ அவர்களின் தனித்துவம் யாருக்கும் இல்லை. முக்கியமாக கவனிக்கபட்டது அவரின் சிகையலையங்காரம். அப்போதே வெளிநாட்டிலிருந்து மேக்கப் ஆர்ட்டிஸ்ட் வைத்துக்கொண்ட நடிகை இவர்தான். அதுமட்டுமல்ல, தமிழில் dusky ஹீரோயின்களுக்கு சிவாஜி அவர்கள் வாணிஸ்ரீயிடம் சென்று எப்படி makeover செய்வது என்று கற்றுகொள்ளுங்கள் என்பாராம்.
சுத்தமாக மேக்கப் இல்லாமல் ஒரு படத்திலும் ( கோரந்த தீபம் ) நடிய்துள்ளார். எல்லா expriment யும் செய்துள்ளார்
மற்ற நடிகைகளிடமிருந்து வாணிஸ்ரீயை தனியாக காண்பித்தது makeover மட்டுமெல்ல, அவரின் இரண்டு துருவங்களான திமிரும், பாந்தமும். வாணி ராணியில் தெளிவாக பார்க்கலாம். சிவாஜி நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் நடித்தது இதுவாகத்தான் இருக்கும்.
திமிரான நாயகி என்றால் இவர்தான். உடம்பின் ஒவ்வொரு அணுவும் திமிராய் வெளிப்படும் என்பது மிகையல்ல. அந்த பாத்திரத்தை மற்ற நாயகியரால் தொடவே முடியவில்லை. தமிழில் குறைவான படங்களே நடித்தாலும் பெரும் புகழ்ப் பெற்ற படங்கள் அவை.
மலர்களில் குறிஞ்சிபோல, நடிகைகளில் வாணிஸ்ரீ தனித்துவம் நிறைந்தவர் என்பது உண்மை.