TamilsGuide

ஏழிசைமாலை

இலங்கை, தென்மராட்சிப் பிரதேசத்திற்குட்பட்ட பகுதியில்  அமைந்துள்ள வெவ்வேறுபட்ட பாடசாலைகளிலிருந்தும் இசையாசிரியர்களையும், இசை மாணவர்களையும் தேர்வு செய்து அவர்தம் இசைத்திறனை வெளிக்கொணரும் நோக்கில்  பிற பக்கவாத்திய இசைக்கலைஞர்களுடனும் இணைந்து “ஏழிசை மாலை “ என்ற நிகழ்ச்சித்திட்டம்  ஆரம்பிக்கப்பட்டது! 
தென்மராட்சி கல்வி வலயம், தென்மராட்சி அபிவிருத்தி கழகம், இசை விரும்பிகள் மற்றும் தனிப்பட்ட நல்லுள்ளங்கள்  ஆகியோரின் ஆதரவுடன் வருடாந்தம் மூன்று - நான்கு ஏழிசைமாலை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடாத்தப்பட்டு வருகின்றன. 
இந்த திட்டத்தின் ஆரம்ப முன்னெடுப்பாளரும், ஏழிசைமாலையின் ஒருங்கிணைப்பாளருமான இசைக் கலைமணி  திருமதி புனிதகுமாரி ஈழநேசன் (சங்கீத ஆசிரிய ஆலோசகர் (I.S.A) தென்மராட்சி கல்வி வலயம்) அவர்களுடன் நுண்கலைமாணி திருமதி சொரூபிணி பிரதீஷ் அவர்களும் இணைந்து  இம்முறை இசைக் கச்சேரியை வழங்க இருக்கின்றார்கள். அத்துடன் நிகழ்ச்சி நிரலில் உள்ளது போல் பல கலை நிகழ்வுகளும் இடம் பெற உள்ளன. 

அனைவரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்புக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்!
 

 

Leave a comment

Comment