TamilsGuide

காஸாவிலிருந்த 11 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்

காஸாவிலிருந்த 11 இலங்கையர்கள் இன்று நாடு திரும்பியுள்ளனர்.

காஸாவிலிருந்து குறித்த 11 இலங்கையர்கள் அண்மையில் எகிப்தை சென்றடைந்தனர்.

இந்தநிலையில், அவர்கள் எகிப்தின் கெய்ரோ விமான நிலையத்தில் இருந்து கட்டாருக்கு சென்றிருந்தனர்.

அதன் பின்னர், குறித்த 11 இலங்கையர்களும் கட்டாரின் தோஹாவிலிருந்து விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக இன்று அதிகாலை நாட்டை வந்தடைந்தமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment