TamilsGuide

ஐந்து நிறுவன தலைவர்களுக்கு கோபா குழு அழைப்பு

ஊழல், மோசடி மற்றும் சட்ட விரோத முறைகேடுகள் குறித்து விசாரிப்பதற்கு ஐந்து நிறுவனங்களின் தலைவர்களுக்கு கோபா குழு அழைப்பு விடுத்துள்ளது.

இதன்படி, பெற்றோலிய கூட்டுத்தாபனம், இலங்கை தர நிர்ணய நிறுவனம், சப்ரகமுவ பல்கலைக்கழகம், கல்வி அமைச்சு மற்றும் தேசிய சமூக நீர் திணைக்களம் ஆகிய நிறுவனங்களே கோப் குழுவின் முன்னிலையில் அழைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் நாளை பெற்றோலிய கூட்டுத்தாபனமும் நாளை மறுதினம் இலங்கை ஆணைக்குழுவும் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் தலைவர்கள், கல்வி அமைச்சு மற்றும் தேசிய சமூக நீர் திணைக்களம் என்பன எதிர்வரும் வியாழக்கிழமை கோப் குழுவில் முன்னிலையாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது,
 

Leave a comment

Comment