TamilsGuide

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிறைவேற்றுக் குழு கூட்டம் ஆரம்பம்

ஐந்து கட்சிகளை உள்ளடக்கிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிறைவேற்றுக் குழு கூட்டம் இன்று காலை ஆரம்பிக்கப்பட்டது.

மன்னாரில் உள்ள தமிழீழ விடுதலை இயக்த்தின் அலுவலகத்தில் குறித்த கூட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

குறித்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் ஆரம்பமான குறித்த கூட்டத்தில் ரெலோ கட்சி சார்பாக கட்சியின் செயலாளரும், கிழக்கு மாகாண நாடாளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் குறித்த கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

குறித்த கூட்டத்தில் கட்சி உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக ஆராயப்படவுள்ளதுடன் பல்வேறு விடயங்களுக்கான தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
 

Leave a comment

Comment