TamilsGuide

என்னை பொம்மை போல பாவித்தார்கள் - நடிகை ஷகிலா

தமிழ் சினிமாவில் சப்போர்ட்டிங் கேரக்டரில் தனது திரைப்பயணத்தை தொடங்கிய நடிகை ஷகிலா அதன்பிறகு குடும்ப சூழ்நிலை காரணமாக கவர்ச்சிப்படங்களில் நடிக்க தொடங்கினார்.

தற்போது காமெடி மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டரில் நடிக்க தொடங்கியுள்ளார். குக் வித் கோமாளி இரண்டாம் சீசனில் நிகழ்ச்சி போட்டியாளராக கலந்துக் கொண்டார். இதன்மூலம் தனி ரசிகர் பட்டாளத்தை பெற்றுள்ளார்.

அதன்பின் தற்போது பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். இதுவரை திருமணம் செய்துகொள்ளாத இவர் மிளா என்ற குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். இந்நிலையில் இவர் அளித்த பேட்டி ஒன்றில்,

எங்கள் வீட்டில் பணம் பெரும் பிரச்னையாக இருந்தது. என் அம்மா ஆண்களை அறிமுகப்படுத்தி அவர்களுடன் நடிக்க சொன்னார். ஏன் போகக் கூடாது என கேட்பார். வேறு வழியில்லாத போது வாயை மூடிக்கொண்டு இருந்தேன். என் பாட்டி இந்த வழியில் நிறைய பணம் சம்பாதித்தார். பின்னர் சினிமாவுக்கு வந்தார்.

ஆனால் இங்கும் என் உடல் வெறும் காட்சியாகவே இருந்தது. அதற்காக நான் மிகவும் வருத்தப்படுகிறேன். கலைஞனாகும் தகுதி எனக்கு இருந்தது, ஆனால் யாரும் என்னை இத்துறையில் விரும்பவில்லை. கேமராவுக்கு முன்னால் என்னை பொம்மை போல பாவித்தார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
 

Leave a comment

Comment