கவர்ச்சி ஆடைகள் அணிந்து பிரபலமான நடிகை உர்ஃபி ஜாவத் இன்று காலை மும்பை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஆடைகளால் பல முறை விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்ட நடிகை தான் உர்ஃபி ஜாவத். இவர், கவர்ச்சியான ஆடைகள் மூலம் அடிக்கடி சர்ச்சைக்கு உள்ளாவார். பொதுவாக, இவரை ஆள் பாதி ஆடை பாதி என்றே கூறலாம்.
இந்நிலையில், மும்பையில் இன்று காலை காபி குடிப்பதற்காக கடை ஒன்றிற்கு உர்ஃபி ஜாவத் சென்றுள்ளார்.
அப்போது, அவரை திடீரென சூழ்ந்த பெண் பொலிஸார் , உர்ஃபி ஜாவத்தை கைது செய்து வாகனத்தில் அழைத்துச் சென்றனர்.
இது குறித்து பொலிஸார் தரப்பில் கூறுகையில், "பொது இடங்களில் முழு முதுகும் தெரியும் படி ஆடை அணிந்து வந்ததால் உர்ஃபி ஜாவத்தை கைது செய்துள்ளோம்" எனக் கூறியுள்ளனர். இதனால், அவரது ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.