TamilsGuide

கொழும்பில் நாளை 10 மணிநேர நீர்வெட்டு

கொழும்பில் நாளை 10 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது

அதன்படி நாளை (சனிக்கிழமை ) மாலை 07 மணி முதல் நாளை மறுதினம் அதிகாலை 05 மணி வரை நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது

இதற்கமைய கொழும்பு 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் இவ்வாறு நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

அம்பதலே நீர் சுத்திகரிப்பு மற்றும் விநியோக நிலையத்தில் மேற்கொள்ளவுள்ள திருத்தப் பணிகள் காரணமாவே இந்த நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது
 

Leave a comment

Comment