TamilsGuide

தேர்தல் சீர்திருத்த ஆணையத்திற்கு புதிய உறுப்பினர் நியமனம்

இலங்கையின் தேர்தல் முறைமையில் திருத்தங்களை முன்மொழிவதற்காக நியமிக்கப்பட்ட 09 பேர் கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு அரசாங்கம் மற்றுமொரு உறுப்பினரை நியமித்துள்ளது.

2023 நவம்பர் 02 ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக இந்த நியமனம் அறிவிக்கப்பட்டுள்ளது.

வர்த்தமானியின் பிரகாரம், ஓய்வுபெற்ற பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் புதிய உறுப்பினராக அலன் கார்மைக்கல் வெரே டேவிட் எஸ்குவேர் நியமிக்கப்பட்டுள்ளார்.
 

Leave a comment

Comment