TamilsGuide

அமெரிக்காவில் 3 வயது குழந்தையை தூக்கி எறிந்து, உதைத்த கொடூர தாய்

அமெரிக்காவில் பெண்ணொருவர் தனது 3 வயது மகனை தூக்கி எறிந்த காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தின. புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த யூலியா ஸ்டோரோஜுக் (29) என்ற பெண், தனது மகனை அடித்து துன்புறுத்தியதற்காக பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். அவர் தன்னுடைய 3 வயது மகனை நடைபாதையில் தூக்கி எறிந்து, உதைக்கும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை உண்டாக்கியது.
  
இதனைக் கண்ட அண்டை வீட்டார் உடனடியாக இதுகுறித்து பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் குழந்தையை யூலியா தாக்குவதை கமெராவில் படம்பிடித்தனர்.

பொலிஸார் யூலியாவின் செயல் மூலம் அவர் ஒரு மான்ஸ்டர் (Monster) என குறிப்பிட்டனர். அத்துடன் 'ஒரு தாய் எப்படி இதை செய்ய முடியும்? அதாவது அவள் ஒரு அரக்கி' என்று மியாமி டேட் காவல்துறையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

இந்த நிலையில் தனது பேச்சை கேட்காததால் மகனை அடித்து உதைத்ததாக யூலியா பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். ஆனாலும் அவர் குழந்தை தொடர்பிலான இரண்டு துஷ்பிரயோக குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டார்.

மேலும், அவர் சிறையில் இருந்து வெளியேறியபோது தனது மகனை நேசிப்பதாகவும், அவரைப் பார்க்க ஆர்வமாக இருப்பதாகவும் கூறினார்.

இதற்கிடையில் யூலியா தனது மகனிடம் இருந்து 30 நாட்கள் விலகி இருக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். 
 

Leave a comment

Comment