TamilsGuide

நிர்மலா சீதாராமனிடம் உண்மையைச் செல்லுவோம்

யாழ்ப்பாணத்துக்கு வருகைதரவுள்ள இந்திய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் தாம் எதிர்நோக்கும் அவலங்கள் தொடர்பில் விளக்கமளிக்கவுள்ளதாக யாழ் கிராமிய கடற்தொழில் சங்கங்களின் சம்மேளனத்தின் தலைவர் செல்லத்துரை நற்குணம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”யாழ்ப்பாணத்திற்கு நாளை மறுதினம் வருகை தரவுள்ள இந்திய மத்திய நிதி அமைச்சரை சந்தித்து அவரிடம் இந்திய மீனவர்களினால் எமது வளங்கள் அழிக்கப்படுபவை தொடர்பில் விரிவாக விளக்கமளிக்கவுள்ளோம்.

அத்துடன் எதிர்வரும் காலங்களில் தமிழகத்திற்கு சென்று தமிழக முதலமைச்சர் மற்றும் தமிழக மீனவர்களிடம் நாம் எதிர்நோக்கும்  அவலங்களையும் எடுத்துரைக்கவுள்ளோம்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.
 

Leave a comment

Comment