TamilsGuide

மன்னாரில் சுகாதார ஊழியர்கள் போராட்டம்

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் சுகாதார ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து இன்று (01) பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர்.

இதன்போது ”சுகாதார ஊழியர்கள் தமக்கு வாரத்தில் 5 நாட்கள்  வேலையை வழங்க வேண்டும்,மேலதிக நேர கொடுப்பனவை வரையறையின்றி வழங்க வேண்டும்,மின்சார கட்டண அதிகரிப்பை இரத்து செய்யவேண்டும்” உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்திருந்தனர்.

அத்துடன் தமது கோரிக்கைகளுக்கு அரசாங்கம் உரிய தீர்வை விரைவாக வழங்காது விட்டால் அனைத்து அவசர சேவைகளையும் பகிஷ்கரித்து போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என சுகாதார ஊழியர்கள் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் இப்போராட்டம் காரணமாக  தூர இடங்களில் இருந்து  வைத்தியசாலைக்கு வருகை தந்த மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Leave a comment

Comment