TamilsGuide

சீன ஆய்வுக் கப்பலின் நடவடிக்கைகள் ஆரம்பம்

கடந்த 25ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த `ஷி யான் 6‘ (Shi Yan 6)என்ற சீன ஆய்வுக் கப்பலானது இன்றும் நாளையும் நாரா நிறுவனத்துடன் இணைந்து தனது ஆய்வு நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளது.

இவ் ஆய்வு நடவடிக்கையின் போது கடல் நீரின் உப்புத்தன்மை மற்றும் வெப்பநிலை குறித்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இதில் நாரா நிறுவனத்தினர்  மற்றும் கடற்படை வீரர்கள் பங்கேற்கவுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
 

Leave a comment

Comment