TamilsGuide

இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர் -அமைதியான தீர்வு அவசியம் – இலங்கை வலியுறுத்து

மத்திய கிழக்கில் தற்போது நிலவும் நெருக்கடிக்கு அமைதியான முறையில் தீர்வு காண்பதற்கான தனது உறுதிப்பாட்டை இலங்கை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

இரு நாட்டு கொள்கையில் இலங்கை உறுதியாக உள்ளது என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

சவூதி அரேபியாவின் வெளிவிவகார அமைச்சர் பைசல் பின் ஃபர்ஹான் அல்-சௌத்துடனான தொலைபேசி உரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன் போது அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் பைசல் பின் ஃபர்ஹான், நெருக்கடிக்கு தீர்வு காண சவூதி அரேபியாவின் அர்ப்பணிப்பு முயற்சிகள் குறித்த விரிவான தகவலை வழங்கியதாக அமைச்சர் கூறினார்.

பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மை மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கு இரு நாடுகளின் பகிரப்பட்ட அர்ப்பணிப்பை இந்த உரையாடல் பிரதிபலிப்பதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.
 

Leave a comment

Comment