TamilsGuide

அமரர். சௌமியமூர்த்தி தொண்டமானின் 24 ஆவது சிரார்த்த தினம்

மலையகத்தின் மூத்த அரசியல் தலைவரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஸ்தாபகருமான அமரர். சௌமியமூர்த்தி தொண்டமானின் 24 ஆவது சிரார்த்த தினமான இன்று (30) நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது.

இதன்போது நாடாளுமன்றக்  கட்டடத் தொகுதியில் அமைந்துள்ள அன்னாரின் உருவச்சிலைக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், தவிசாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மருதப்பாண்டி ராமேஸ்வரன் உள்ளிட்ட  கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்வின் பின்னர் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைமையகமான சௌமியபவனிலும்  பூஜை வழிபாடுகள் இடம்பெற்றிருந்தன.
 

Leave a comment

Comment