TamilsGuide

கல்வி அமைச்சருக்கும் இலங்கை ஆசிரியர் சங்கத்திற்கும் இடையில் கலந்துரையாடல்

கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவுடன் இலங்கை ஆசிரியர் சங்கம் கலந்துரையாடலொன்றை முன்னெடுக்கவுள்ளது.

குறித்த கலந்துரையாடல் எதிர்வரும் 31 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தினூடாக சம்பளப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான யோசனையொன்று இதன்போது சமர்ப்பிக்கப்படும் என்றும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் மேலும் தெரிவித்துள்ளார்.
 

Leave a comment

Comment