TamilsGuide

கொழும்பு தீ விபத்திற்கான காரணம் கண்டறியப்பட்டுள்ளது

கொழும்பு -.புறக்கோட்டை – 2ம் குறுக்கு தெரு பகுதியிலுள்ள ஆடையகத்தில் தீ பரவியமைக்கான காரணம் கண்டறியப்பட்டுள்ளது.

வர்த்தக நிலையத்திற்கு சாம்பிராணி தூபம் காட்டுவதற்காக தேங்காய் சிரட்டைகளை பெட்ரோல் ஊற்றி முகாமையாளர் பற்ற வைக்க முயற்சித்த தருணத்திலேயே, தீ பரவியுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

விபத்தில் 21 பேர் காயமடைந்துள்ளதுடன், அவர்களில் 6 பேரின் நிலைமை கவலைக்கிடம் என வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 11 பெண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a comment

Comment