TamilsGuide

பாடகியை பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாக்கிய கிட்டார் கலைஞர் கைது

பிரபல இசைக்குழு ஒன்றின் பெண் பாடகியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் அதே இசைக்குழுவை சேர்ந்த கிட்டார் கலைஞர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் ஜா-எல பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

32 வயது நிரம்பிய குறித்த இசைக்குழுவின் கிட்டார் கலைஞர் ஜா-எல துடெல்ல பகுதியை சேர்ந்தவராவார்.

நீர்கொழும்பில் இயங்கி வரும் குறித்த இசைக்குழுவைச் சேர்ந்த 28 வயதான பாடகி, தனது முறைப்பாட்டை சமர்ப்பித்ததுடன், போக்குவரத்து வசதிகளுக்காக தனது இசைக்குழுவுக்கு வழங்கப்பட்ட பேருந்தில் சந்தேக நபர் தன்னை உடல் ரீதியாகவும், வாய்மொழி மூலமாகவும் தாக்கியதாகக் குறித்த முறைப்பாட்டில் கூறியுள்ளார்.

ஜாஎல பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தின் நிலைய கட்டளைத் தளபதி உப பொலிஸ் பரிசோதகர் எஸ்.ரேணுகாவினால் ஜாஎல பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதம பொலிஸ் பரிசோதகர் சமிந்த எதிரிசூரியவின் பணிப்புரையின் பேரில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
 

Leave a comment

Comment