TamilsGuide

வவுனிக்குளத்தில் நெற்செய்கை பங்கீட்டுக்  கூட்டம்

முல்லைத்தீவு – வவுனிக்குளம் கால போக நெற்செய்கைக்கான பங்கீட்டு கூட்டமானது, நேற்று(26)  வவுனிக்குளம் நீர்ப்பாசன பொறியியலாளர் அலுவலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது

மாவட்ட அரசாங்க அதிபர் உமாமகேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர், மாவட்ட பிரதி நீர்ப்பாசன பொறியியலாளர், மாவட்ட விவசாயப் பணிப்பாளர், பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர், மாவட்ட வனத்துறை உத்தியோகத்தர், விவசாயிகள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது வவுனிக்குளத்தின் கீழான பெரும்போக நெற்செய்கைகாக துணுக்காய் கமநல சேவை நிலையத்திற்குற்பட்ட பகுதிகளும்,பாண்டியன்குளம் கமநல சேவை நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளுமென  சுமார்  6060 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டிருந்தமை  குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment