TamilsGuide

டயனா கமகே உள்ளிட்ட சாட்சியங்கள் 6 ஆம் திகதி விசாரணைக்கு அழைப்பு

இராஜாங்க அமைச்சர் டயானா கமகே மற்றும் எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான சுஜித் சஞ்சய் பெரேரா மற்றும் ரோஹன பண்டார ஆகியோருக்கு இடையில் அண்மையில் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட குழு முன்னிலையில் சம்பந்தப்பட்டவர்கள் மற்றும் சம்பவத்தின் சாட்சிகள் அனைவரையும் எதிர்வரும் 6ஆம் திகதி அழைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தலைமையில் சம்பவம் குறித்து விசாரணை நடத்த குழுவொன்றை நியமித்ததுடன், அக்குழு நேற்று முதன்முறையாக பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் கூடியது.

இதன்படி எதிர்வரும் 6ஆம் திகதி முற்பகல் 10.00 மணிக்கு உரிய குழு மீண்டும் கூடவுள்ளதோடு, சம்பவத்தை நேரில் கண்டவர்கள் மற்றும் சம்பந்தப்பட்டவர்களை அழைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
 

Leave a comment

Comment