TamilsGuide

பாடசாலை மாணவர்களுக்குப் போதை மாத்திரைகளை விநியோகித்தவர் கைது

அம்பாறையில் நீண்ட காலமாக பாடசாலை மாணவர்களுக்கு  போதைமாத்திரைகளை விநியோகித்து வந்த நபரை காரைதீவு பிரதான வீதியில் வைத்து பொலிஸார் நேற்றை தினம்(26) கைதுசெய்துள்ளனர்.

அம்பாறை மாவட்டம் கல்முனை விசேட அதிரடிப்படை முகாமிற்கு கிடைக்கப்பெற்ற  இரகசியத்  தகவலையடுத்தே இக்கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கைதுசெய்யப்பட்ட நபரிடம் இருந்து 500 போதைமாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த நபரை  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Leave a comment

Comment