TamilsGuide

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் வெளியிட்டுள்ள விசேட தீர்மானம்

நவம்பர், முதல் வாரத்திலிருந்து தொடர் தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபட அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.

வெளிநாடு செல்ல எதிர்பார்த்திருக்கும் வைத்திய அதிகாரிகளை தக்கவைத்துக் கொள்வதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், தொழிற்சங்கப் நடவடிக்கையை அறிவித்துள்ளது.

அதற்கிணங்க, எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி முதல் விஐபி சுகாதாரப் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கான நடமாடும் அம்புலன்ஸ் சேவைகளில் இருந்து மறு அறிவிப்பு வரும் வரை விலகவும், மருத்துவமனைக் கடமைகளுக்கு வெளியே திட்டமிடப்பட்ட நடமாடும் கிளினிக்குகள் உட்பட தொடர்புடைய பிற கடமை நடவடிக்கைகளில் இருந்து மறு அறிவிப்பு வரும் வரை விலகவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.

அதேநேரம், முன்மொழியப்பட்ட தீர்வுகளை நடைமுறைப்படுத்துவதற்கு அதிகாரிகளின் போதிய பதிலைக் கொடுக்காததற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், நவம்பர் மாதம் முதலாம் திகதிக்கு பின்னர் மாகாண அளவிலான தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

Leave a comment

Comment