TamilsGuide

மட்டக்களப்பில் கரையொதுங்கிய டொல்பின்கள்

மட்டக்களப்பு - வாகரை காயன்கேணி கடலில் டொல்பின்கள் கரையொதுங்கியுள்ளன. இன்று காலை ஆழ் கடல் பகுதியில் இருந்து டொல்பின்கள் கடற்கரையை நோக்கி வந்ததாகவும் அவற்றினை மீண்டும் கடலில் விடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாகவும் வாகரை பிரதேச செயலாளர் டி.அருணன் தெரிவித்தார்.
  
கடற்றொழில் திணைக்களம், கஜீவத்தை கடற்படையினர், நாரா, கிரான், அம்பாறை வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பிரதேச மீனவ சங்கங்கள் இணைந்து அவற்றினை பாதுகாப்பாக கடலில் விடும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது காயப்பட்ட டொல்பின்களுக்கு ஊசி மூலம் மருந்தேற்றப்பட்டு பாதுகாப்பாக சுமார் 1 கிலோ மீற்றருக்கு அப்பால் கடலில் விடப்பட்டது. 

Leave a comment

Comment