TamilsGuide

டிகிரிமெனிக்கே தடம் புரண்டது

கொழும்பில் இருந்து நானுஓயா நோக்கி பயணித்த பயணிகள் இரயிலான டிகிரிமெனிக்கே தலவாக்கலைக்கும் வட்டக்கொடைக்கும் இடையில் நேற்றிரவு தடம் புரண்டது.

இந்நிலையில் குறித்த இரயிலை தண்டவாளத்தில் ஏற்றும் பணிகள் தொடர்ந்து இடம் பெற்ற வருவதாக ஹட்டன் இரயில் நிலைய கடமை நேர உத்தியோகத்தர் தெரிவித்தார்.

அத்துடன் குறித்த சம்பவம் காரணமாக இரயில் சேவைகள் கொழும்பில் இருந்து ஹட்டன் வரையிலும் மற்றும் பதுளையில் இருந்து நானுஓயா வரையிலும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
 

Leave a comment

Comment